முறையாக வரி செலுத்தாத 50 கடைகளுக்கு சீல் – சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

தொழில் வரி செலுத்தாத 50 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக தொழில் மற்றும் சொத்து வரி செலுத்தாதவர்கள், கடையின் உரிமம் முறையாக பெறாதவர்கள், மாநகராட்சி அறிவுறுத்தலின்படி வரி நிலுவையை செலுத்த வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 15 மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் இருக்கக்கூடிய வரியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.
image
இந்நிலையில் ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட ஜி.பி சாலையில் தொழில் மற்றும் சொத்து வரியை கட்டாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ள கடை உரிமையாளர்கள் 75 பேருக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து வரி செலுத்தாத காரணத்தால் இன்று காலை 50 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சியின் வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் காலதாமதம் இல்லாமல் முறையாக வரியை செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.