வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த ஒன்பது மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
![]() |
இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதையடுத்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி முதன்முறையாக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது அதிபர் ஜோபைடனை சந்தித்து இது நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு குறித்தும், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை வாங்குவது குறித்தும், பேசுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement