பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா; ஆலந்தூர், நங்கநல்லூரில் 1000 பேருக்கு அன்னதானம்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்

ஆலந்தூர்: ஆலந்தூர், வடக்கு மற்றும் தெற்கு பகுதி திமுக சார்பில், பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதிகளில் நடந்தது. ஆலந்தூர் புதுதெருவில் நடந்த விழாவிற்கு வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளனும், நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் நடந்த விழாவிற்கு ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரனும் தலைமை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.பூபாலன், எம்.எஸ்.கே. இப்ராகிம், இரா.பாஸ்கர் கீதா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பகுதி அவை தலைவர் சுந்தர்ராஜன், பகுதி பொருளாளர் அபுதாஹீர், கவுன்சிலர்கள் சாலமன், செல்வேந்திரன், பிருந்தா முரளிகிருஷ்ணன், பூங்கொடி ஜெகதீஸ்வரன், துர்கா தேவி நடராஜன், பாரதி கருணாநிதி, வட்ட செயலாளர்கள் உலகநாதன், யேசுதாஸ், மணப்பாக்கம் ரவி, வேலவன், சரவணா மற்றும் ஜி.ரமேஷ், மூ.சத்யா, ஜெயக்குமார், வெள்ளைச்சாமி, அபிஷேக், லியோ பிரபாகரன், ரமணா, முனுசாமி, செல்வம், வேல்முருகன், பி.ஆர்.சுரேஷ், கேபிள் ராஜா, காஜா மொய்தீன், ரூபன், தீனன், பாஷா பாய், மகளிரணி பாண்டிச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.