மன நோயாளி தாக்கியதில் தாய் உட்பட 3 பேர் பரிதாப பலி| 3 people including the mother were tragically killed in the attack by the mental patient

ஸ்ரீநகர்,ஜம்மு – காஷ்மீரில், மனநிலை பாதிக்கப்பட்டவர் கட்டையால் தாக்கியதில், அவரது தாய் மற்றும் இருவர் உயிரிழந்தனர்; ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தின் அஷ்முகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவைத் அஹமத். இவர், நேற்று காலை திடீரென கனமான கட்டையை எடுத்து, கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கியுள்ளார். தன் தாய் ஹபீஸாவையும் தாக்கினார்.

இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தாக்குதலில் பக்கத்து வீட்டுக்காரர் களான குலாம் நபி மற்றும் மொஹம்மத் அமின் ஆகியோரும் இறந்தனர்.

காயமடைந்த ஏழு பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில், ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

‘பலரும் சேர்ந்து அவரை அடக்க முயன்றோம்; ஆனால் முடியவில்லை’ என, காயமடைந்த ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

குற்றவாளி மன நோயாளி எனக் கூறப்பட்டாலும், அவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும் சொல்லப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.