ஜப்பானின் கடலோர பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் நீகாட்டா மாகாணத்தில் 6,300 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

ஜப்பானின் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால், நீகாட்டா மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் ஏற்பட்டு வரும் பனிப்பொழிவால் சில இடங்களில் சாலைகள் மூடப்பட்டு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த டிச.17ம் தேதி முதல் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.