பொங்கல் பரிசில் டிவிஸ்ட்..! கூடுதல் ரொக்கம் .. செங்கரும்பு, கட்டி வெல்லம்..?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் சுமார் ரூ.2,356.67 செலவில் ரூ.1000 ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மேலும், பொங்கல் தொகுப்பில் முக்கிய பொருளான கரும்பு இடம்பெறாதது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பேருந்தை ஏமாற்றத்தை தந்துள்ளது.

குறிப்பாக விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை அரசு கொள்முதல் செய்யாததால் பொங்கல் கழித்து பல கரும்புகள் வீணாக வாய்ப்புள்ளது. 2.19 கோடி குடும்ப அட்டைகளில் அனைவரும் கரும்பு வாங்குவார்களா என சந்தேகம்தான். ஆகையால், அரசே கரும்பை கொள்முதல் செய்து அனைத்து அட்டைதரர்களுக்கும் வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி சீமான், பாமக ராமதாஸ் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பொங்கல் பரிசு தொகுப்பில் கூடுதல் பொருட்களை சேர்க்கவும், பரிசு தொகையை அதிகரிக்கவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இது

அரசுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியும் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் இன்று தனது ட்விட்டர் பதிவில், உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிக்கைக்கு, ரேசன் அட்டைக்கு ரூ.1000 ரொக்கம் உட்பட பரிசுப் பொருட்கள் வழங்கும் தமிழ் நாடு அரசு, செங்கரும்பும், கட்டி வெல்லமும் இன்ன பிற பொருட்களும் சேர்த்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன.

செங்கரும்பும் விவசாயிகளிடமும், வெல்லம் உற்பத்தியாளர்களிடமும் நேரடியாகவே அரசு கொள்முதல் செய்யலாம் – இதனால் விளை பொருளுக்கு சந்தையிலும் நல்ல விலை கிடைக்கும், பொங்கலின் இனிமை மென்மேலும் பெருகும் என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் மேலும் சில பொருட்கள் சேர்க்க அதிகபட்ச வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.