என்.ஜி.ஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை – தலிபான் அரசு உத்தரவு

ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், அங்கு பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் மாணவ – மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆடைகள் அணிவதில் விதிகளை மீறியதாக மறு அறிவிப்பு வரும் வரை பெண் ஊழியர்கள் பணிபுரிய தடை விதிக்கப்படுவதாக பொருளாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹ்மான் ஹபீப் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.