பாகிஸ்தானில் ஹிந்து பெண் தலை துண்டித்து கொலை| Hindu woman beheaded in Pakistan

லாகூர்,-பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண், தலை துண்டித்து, தோல் உரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இங்கு சிந்து மாகாணத்தில் உள்ள சின்ஜ்ஹோரா நகரின் அருகேயுள்ள கிராமத்து வயல் வெளியில், சமீபத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பெண்ணின் தலை, துண்டிக்கப்பட்ட நிலையில் சற்று தொலைவில் கிடந்தது. மேலும், அந்த பெண்ணின் உடல் மற்றும் முகத்தில் உள்ள தோல் முழுமையாக உரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்; மார்பகங்களும் சிதைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பாகிஸ்தான் எம்.பி.,யும், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவருமான கிருஷ்ண குமாரி கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் தயா பெல். ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். கணவரை இழந்த இவருக்கு, நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்த பெண் எதற்காக இத்தனை கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஹிந்து மற்றும் சீக்கிய மதத்தவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.