சென்னை: தமிழ்நாடு புத்தாண்டு பரிசாக, அரசு ஊழியர்களுக்கு 4சதவிகித அகவிலைப்படை வழங்கியுள்ள நிலையில், அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினை பல்வேறு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி மட்டும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வின் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (1ந்தேதி) அறிவித்தார். […]
