உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தொழிலாளர் நலத் துறை கீழ் செயல்பட்டு வந்த, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு திட்டம் செயலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

தமிழக முதலமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி
திமுக
தலைவர்
மு.க.ஸ்டாலின்
பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற போதே அமைச்சரவையும் பதவி ஏற்றது. அப்போது, அவரது மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான
உதயநிதி
ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து
உதயநிதி
ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்மொழிய அதனை பல்வேறு மூத்த அமைச்சர்கள் பொது வெளியில் வழிமொழிந்தனர். ஒரு வழியாக, திமுக உடன்பிறப்புகள் எதிர்பார்த்தபடி, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி அமைச்சராக, உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்.

அவருக்கு அமைச்சர் மெய்யநாதன் வசமிருந்த, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை;

முதலமைச்சர் வசம் இருந்த சிறப்பு திட்ட செயலாக்கத் துறை; அமைச்சர் பெரிய கருப்பன் வசமிருந்த,

வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது புதிதாக, தொழிலாளர் நலத் துறை கீழ் செயல்பட்டு வந்த, தமிழ்நாடு திறன்

மேம்பாட்டுக் கழகம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள, சிறப்பு திட்ட செயலாக்கத்

துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அடுத்த தலைமுறை இளைஞர்களிடம், உதயநிதி ஸ்டாலின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அவரது கட்டுப்பாட்டில் உள்ள துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.