அடிடா நம்ம பறைய… மேடையில் குத்தாட்டம் போட்ட அமைச்சர் பொன்முடி..!

தமிழ்நாடு முழுக்க தை பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் மகிழ்ச்சியாக பொங்கலிட்டு பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சாதி, மத, மொழி பேதமின்றி மாவட்ட வாரியாக சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.

தமிழரின் பாரம்பரிய இசையான பறையை அடித்து நடனமாடி பொங்கல் நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பறை இசைக்கு நடனமாடியது அங்கிருந்தவர்களை ஆரவாரப்படுத்தியது.

சரவெடியான பேச்சுக்களில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் அமைச்சர் பொன்முடி பொங்கல் நிகழ்ச்சியின்போது யாரும் எதிர்பாராத நிகழ்வாக நடனமாடியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

விழுப்புரம் நகர திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு உயிர்களைத் துறை அமைச்சர் பொன்முடி இல்லம் அருகே சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகளை முன்னிட்டு கோல போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அப்போது நிகழ்ச்சியின் துவக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பறை இசை வாசிக்கப்பட்ட போது உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், திமுக விழுப்புரம் நகர செயலாளர் சர்க்கரை ஆகியோர் பறை இசைக்கு குத்தாட்டம் போட்டனர், இந்த நிகழ்ச்சி அங்குள்ள பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.