டெல்லியில் டிஜிபி-க்கள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைவர்கள் மற்றும் மத்திய காவல் படை தலைவர்களின் ஆண்டு மாநாடு, கடந்த 2014ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இதன்படி 2022ம் ஆண்டுக்கான மாநாடு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 3 நாள் நடக்கிறது. இதில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டில் காவல்துறை மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள், சைபர் கிரைம் தொழில் நுட்பங்கள், பயங்கரவாத தடுப்பு சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது. மேலும், உள்நாட்டு மற்றும் நாட்டின் எல்லையோர பாதுகாப்பு குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.