பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்த பதிவுகள் நீக்கம்; திரிணாமுல் எம்பி சாடல்.!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே நேரடி காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள ஒருவர், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார்.

இதையடுத்து, இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ”இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் மனநிலையை இது பிரதிபலிக்கிறது.

ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல” என விமர்சித்துள்ளார். ஆனாலும் ஆவணப்படம் பல உண்மைகளை கேள்விக்கு உட்படுத்தியாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

இந்தநிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து வெளியிட்ட பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், டுவிட்டர் லிங்க்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், லிங்க்குகளை ஒன்றிய அரசு முடக்கியது. இந்தநிலையில் ஆவணப்படம் குறித்து கருத்து தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியின் டிவிட்டர் பதிவும் நீக்கப்பட்டுள்ளது.

இந்திய சிறுபான்மையின மக்களைப் பற்றிய மோடியின் எண்ணம் இந்த ஆவணப்படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஒ ப்ரைன் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

யார் இந்த ராதிகா மெர்ச்சன்ட்? அம்பானி வீட்டுக்கு வரும் மருமகள்… விரைவில் டும் டும் டும்!

இது குறித்து அவர் டிவிட்டர் பதிவில், ‘‘ பிபிசி ஆவணப்படம் குறித்த எனது பதிவுகளை இந்திய டிவிட்டர் தளம் நீக்கியுள்ளது. டிவிட்டரில் சென்சார்ஷிப் வந்துவிட்டது. பல லட்சம் பேர் எனது பதிவை பார்த்துள்ளனர். பிபிசியின் 1 மணி நேர ஆவணப்படத்தில், பிரதமர் மோடி சிறுபான்மையினரை எப்படி வெறுக்கிறார் என்பது விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் நன்மைக்காக எதிர்கட்சிகள் இன்னும் வலிமையோடு போராடுவோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.