புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தொட்டியை இடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதிய நீர் தேக்கத் தொட்டியை கட்டவும், குழாய்கள் அமைக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தனது எம்.பி. நிதியில் இருந்து 79 லட்சம் ஒதுக்கியுள்ளார்.