அண்ணாமலைக்கு எதிராக சக்தி யாத்திரை..!! எப்போ ? எங்கே தெரியுமா ?

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தினமும் தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ஜனவரி 27ம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது “சக்தி யாத்திரை” ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம். அரசியல் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன.

எனக்கு Z பிரிவு பாதுகாப்பு இல்லை. எனவே ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு எதிராக நீதிக்கு போராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும், ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.