‘கோயில்களில் மணி அடித்தவர்கள்..’- உ.பி. முதல்வரை பொளந்த பீகார் அமைச்சர்.!

பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் கடந்த ஜனவரி 11ம் தேதி நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், ‘‘ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ராமசரித்மானஸ் கவிதை சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் மீண்டும் குறிப்பிட்ட சாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது.

ராம்சரித்மனாஸுக்கு ஏன் எதிர்ப்பு வந்தது? கல்வியைப் பெற்ற பின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பாம்புகளைப் போல ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்று அது கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ்மிருதி’ சமூகத்தை பிளவுபடுத்துகிறது. மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் ஆகியவை காவி சித்தாந்தவாதியான கோல்வால்கரின் எண்ணங்களின் கொத்து வெறுப்பைப் பரப்பியது. வெறுப்பு அல்ல, அன்பே நாட்டைப் ஒண்றிணைக்கிறது.

மரியாதைக்குரிய இந்து மத நூல்களான மனுஸ்மிருதி, ராமசரிதமானஸ் போன்றவை தலித்துகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் கல்வி கற்கும் எதிரானவை’’ என அவர் கூறினார். அவரது இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. கோரிக்கை விடுத்தது. ஆனால் தன் கருத்தில் உறுதி இருப்பதாக தெரிவித்த கல்வி அமைச்சர், உண்மை அறியாத காவிகள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இந்து மத நூல்கள் குறித்த பீகார் கல்வி அமைச்சரின் கருத்து ஏற்படுத்திய சர்ச்சை ஓயாதநிலையில், மற்றொரு பீகார் அமைச்சரான அலோக் மேத்தாவின் யோகி ஆதித்யநாத் மற்றும் பிராமிண சமூகம் குறித்த கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாநில வருவாய்த்துறை அமைச்சர் அலோக் மேத்தா கடந்த சனிக்கிழமை பேசுகையில், “கோவில்களில் மணி அடிக்கும் மக்கள், தற்போது சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கின்றனர். உதாரணத்திற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மேலும், பிராமண சமூகத்தை குறிவைத்து, ‘‘நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர், பிரிட்டிஷ் அரசின் முகவர்களாக இருந்தவர்கள். அவர்கள் தற்போது பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை உள்ளடக்கிய மீதமுள்ள 90 சதவீதத்தினர் மீது தங்கள் சுரண்டலை நடத்துகிறார்கள். .

முன்னாள் பீகார் துணை முதல்வர் ஜகதேவ் பாபு பிரதிநிதித்துவப்படுத்திய தொண்ணூறு சதவீத மக்கள்தொகை, முதலில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தாலும், பின்னர் அவர்களின் முகவர்களாலும் சுரண்டப்பட்டது. அவர்களை ஜகதேவ் பாபு 10 சதவீதத்தினர் என்று அழைத்தார்” என்று அலோக் மேத்தா கூறினார்.

பிபிசி தொடர் நீக்கம்; பிரதமர் பயப்படுவது தெரிகிறது..காங்கிரஸ் சுளீர்.!

அதைத் தொடர்ந்து அவரது கருத்து சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர், தனது நிலைப்பாட்டை அமைச்சர் அலோக் மேத்தா தெளிவுபடுத்தியுள்ளார். ஜக்தேவ் பாபு பேசிய 10 சதவீதம் பேர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றும், இந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.