நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில் அடுத்தடுத்து சதம்..!!

இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில் அடுத்தடுத்து சதம் விளாசினர். இந்தூரில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 82 பந்துகளில் சதம் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தமது 30வது சதத்தை ரோஹித் சர்மா பூர்த்தி செய்தார். மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில் 93 பந்துகளில் 103 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.