முர்ஷிதாபாத், மேற்கு வங்கத்தில், மர்ம நபர்களால் சுடப்பட்ட திரிணமுல் காங்., நிர்வாகி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முர்ஷிதாபாத் மாவட்டத்தில், இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் மதராசா ஒன்றின் தலைமை ஆசிரியராக, திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த அல்தப் ஷேக் பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது, மறைந்திருந்த சில மர்ம நபர்கள் அவரை நோக்கி சுட்டனர்.
இதில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள திரிணமுல் காங்., – எம்.பி., சாந்தனு சென், ”மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், இதை தடுக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement