குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் தொடங்கியது

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் தொடங்கியது. படைகள் பாசறை திரும்பும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் படைகள் பாசறை திரும்பும் நிகழ்வை காண குவிந்துள்ளனர். டெல்லி கடமை பாதையில் ராணுவம் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.ராணுவம் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியில் 29 வகையான இசை வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. படைகள் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியில் 3,500 டிரோன்களுடன் டிரோன் ஷோ நடத்தப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.