பிஎம் கேர்ஸ் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை; ஒன்றிய அரசு பதில்.!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தீவிரமாக பரவியது. இந்த இரண்டாம் அலையில் தான் இந்தியாவில் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டது. ஆக்சிஜன் இல்லாமலும், மருத்துவமனைகளில் அனுமதி இல்லாமலும், சுடுகாட்டில் அடக்கம் செய்ய இடம் இல்லாமலும் மக்கள் பரிதவித்தனர்.

உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர்களை மொத்தமாக எரித்தது போட்டோ எடுக்கப்பட்டு உலகளவில் பேசுபொருளானது. இந்த புகைப்படம் சர்வதேச அளவில் உயரிய விருதும் பெற்றது. கொரோனா 2ம் அலையின் போது, மக்களின் மருத்துவ மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி’ அல்லது ‘பிஎம் கேர்ஸ்’ என்ற பெயரில் இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.

இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடையாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய அரசின் முத்திரை, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமாக www.pmcares.gov.in என்ற இணையதளம் கருதப்பட்டது. இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடை அளித்து வந்தனர். இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் நிதி செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

அதைத் தொடர்ந்து பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கப்பட்டு வரும் நன்கொடை விவரம், கையிருப்பு நிதி, செலவழிக்கப்பட்ட நிதி உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், பிஎம் கேர்ஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும், பிஎம் கேர்ஸ் நிதி விவகாரங்கள் சுதந்திரமாக கையாளப்படுவதை உறுதி செய்ய அதை அரசியலமைப்பின்படி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் உத்தரவிடும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு குறித்த விசாரணையில் ஒன்றிய அரசு இன்று கூறும்போது, ‘‘பிஎம் கேர்ஸ் நிதி செயல்பாடுகளை ஒன்றிய அரசோ அல்லது மாநில அரசோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை. பிஎம் கேர்ஸ் எனப்படுவது பிஎம் கேர்ஸ் பொது தொண்டு அறக்கட்டளையாகும். இது இந்திய அரசியல் அமைப்பாலோ, ஒன்றிய மாநில அரசு சட்டங்களாலோ உருவாக்கப்படவில்லை.

பிஎம் கேர்ஸ் பொது அறக்கட்டளை என்பதால் அது தகவலறியும் உரிமை சட்டத்திற்கான பொது அதிகாரத்தின் கீழ் வராது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்படும் நிதி எவ்வாறு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற எந்த வித வழிமுறைகளும் இல்லை. பிற தனியார் தொண்டு நிறுவனங்களை போல பிஎம் கேர்ஸ் தொண்டு அமைப்புக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கும் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி (Prime Minister’s National Relief Fund) இணையதளத்தில் பயன்படுத்தப்படுவது போல, பிஎம் கேர்ஸ் நிதி (PM CARES Fund) இணையதளத்திலும் இந்திய அரசின் முத்திரை, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்க டொமெயின் முடிவுகளை (.gov.in) பயன்படுத்தப்படுகிறது.

பட்ஜெட் 2023: ரெடியான ஜாக்பாட் அறிவிப்புகள்… மோடியின் தேர்தல் கணக்கு!

இந்த தொண்டு நிறுவனம் இந்திய அரசியலமைப்பிற்கு கீழ் இல்லாதாதாலும், பொது சொத்து இல்லை என்பதாலும் 3ம் தரப்பின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது’’ என்று ஒன்றிய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.