யாரும் இல்லாத நேரத்தில் 10 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர்.. தட்டித்தூக்கிய போலீசார்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதிக்கு அருகில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 22 வயது அஜித் என்ற மகன் இருக்கிறார். அஜித் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு அஜித் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அஜித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.