100 நாள் வேலை திட்டத்தில் இன்று முதல் அனைத்துப் பணிகளுக்கும் புகைப்படத்துடன் வருகைப் பதிவு

திருச்சி/ புதுக்கோட்டை: திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளையும் கண்காணிக்க புகைப்படத்துடன் கூடிய வருகைப்பதிவு இன்று (ஜன.1) முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்து ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒரு பணித்தளத்தில் 20 பணியாளர்களுக்கு குறையாமல் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் சார்ந்த திறன் சாராப் பணிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட முன்னுரிமை பணிகளை வெளிப்படைத் தன்மையுடன் … Read more

ஓர் அங்குல நிலத்தை கூட எவராலும் ஆக்கிரமிக்க முடியாது: இந்தோ – திபெத் பாதுகாப்பு படைக்கு அமித் ஷா பாராட்டு

பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை கர்நாடகா வந்தார். மண்டியா, ராம்நகர், பெங்களூரு ஆகிய இடங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பெங்களூருவில் இந்தோ – திபெத்திய எல்லை காவல் படையின் (ஐடிபீபி) துப்பறிதல் பயிற்சி மையத்தை அவர் நேற்று தொடங்கிவைத்து பேசியதாவது: மத்திய அரசின் ஆயுத காவல்படைகளில் மிகவும் மோசமான வானிலையில் ஐடிபீபி செயல்படுகிறது. இந்திய – சீன எல்லையில் ஐடிபீபி வீரர்கள் … Read more

உலகின் தலைசிறந்த விஞ்ஞானி: முதலிடம் பிடித்து தமிழர் சாதனை!

2023ஆம் ஆண்டிற்கான உலகில் தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ராமசாமி ராஜேஷ்குமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர்.ராமசாமி ராஜேஷ்குமார் என்பவர் சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த 100 அறிவியல் விஞ்ஞானிகளில் டாக்டர் ராமசாமி ராஜேஷ்குமார் பெயர் முதல் இடத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் தென்கொரியா நாட்டில் Jeonbuk … Read more

டெல்லியில் லேசான நிலநடுக்கம்!

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புத்தாண்டின் முதல் நாளான நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானா மாநிலத்தின் ஜாஜார் பகுதியை மையமாக கொண்டு உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. புத்தாண்டு பிறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 01:19:42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஹரியானாவின் ஜாஜார் பகுதியில் இருந்து … Read more

யார் இந்த பாபா வங்கா? 2023-ல் நடக்கப் போகும் விபரீதங்கள்… முதல் நாளே இப்படியா!

பாபா வங்கா… இந்த பெயரை சர்வதேச அளவிலான நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்கும் நபர்களுக்கு நன்கு பரீட்சையமான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர். இவர் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. சிறு வயதில் மிக மோசமான புயலில் சிக்கி காணாமல் போனார். அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. பல நாட்களுக்கு பின்னர் குடும்பத்தினரால் கண்டெடுக்கப்பட்டார். பாபா வங்கா கணிப்புகள்அப்போது அவரது இரு கண்களிலும் அதிகப்படியான மண் தாக்கி பார்வை தெரியாத நிலைக்கு ஆளாகியிருந்தார். இவரை … Read more

மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது நாளை தீர்ப்பு..!

மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் நாளை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளின் விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் டிசம்பர் 7ம் தேதி பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. Source link

சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில் 276 வாகனங்கள் பறிமுதல் – போலீசார்

சென்னை: சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீதும், ஆபத்தான முறையில் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்கு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாநகர் … Read more

தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள்: பனியில் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகளால் பாதுகாப்பு

ஊட்டி:  தாவரவியல்  பூங்காவில் பனியால் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார்  செடிகள் கொண்டு பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊட்டியில்  2023 மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா,  மரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உட்பட மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் நர்சரிகளில் நாற்றுக்கள் நடவு  செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக  காணப்படுகிறது. மேலும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்கிறது. இதனால், … Read more

புத்தாண்டை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதையை முதலவர் மு.க.ஸ்டாலின் செலுத்தினர். அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு மரியாதையை செலுத்தினார்கள்.   

நாடு முழுவதும் இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு நாளை முதல் அமல்

டெல்லி: இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில் இத்திட்டத்தை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு ஒன்றிய அரசு நீட்டித்தது. இந்த சூழலில் … Read more