13 மணிநேரப் பயணத்திற்கு பின் புறப்பட்ட இடத்திலே தரையிறங்கிய விமானம்

துபாயிலிருந்து நியூசிலாந்துக்கு சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம், 13 மணிநேர பயணத்திற்குப் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால், பயணிகள்  அவதிக்குள்ளாகினர்.

துபாயில் இருந்து கடந்த ஜனவரி 27ந் தேதி புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், ஆக்லாந்து நகரில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக மீண்டும் திருப்பி விடப்பட்டது.

சற்று நேரத்தில் தரையிறங்குவோம் என எதிர்பார்த்துக் காத்திருந்த பயணிகள், மீண்டும் துபாயிலேயே கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.