துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம்! சீட்டு கட்டுகள் போல சரிந்த பிரம்மாண்ட கட்டிடங்களின் வீடியோ



துருக்கியில் மீண்டும் இரண்டு சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டத்தில் கட்டிடங்கள் சீட்டு கட்டு போல சரிந்து விழும் பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நிலநடுக்கம்

சிரியா எல்லையின் தென்கிழக்கே, துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் இன்று அதிகாலை 3:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் 7.8 அளவில் பதிவாகியிருக்கும் இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தை அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் உறுதிசெய்திருக்கிறது.
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் விழுந்தன.

வீடியோ

அதில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது வரையில் நிலநடுக்க பாதிப்பால் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து 7.8 மற்றும் 6 என்ற ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக மிகப்பெரிய கட்டிடங்கள் தரைமாட்டமான காட்சிகள் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.