துருக்கி, சிரியா பூகம்ப பலி 1,300 ஆக அதிகரிப்பு – தூக்கத்தில் அடங்கிய உயிர்கள்!

பிப்ரவரி 6 அதிகாலை 4 மணி எல்லா நாளையும் போல் புலரவில்லை துருக்கியிலும் சிரியாவிலும், இன்னும் சில அண்டை நாடுகளிலும். துருக்கியின் தொழில்நகரான் காசியான்டேப் நகரில் ஏற்பட்ட பூகம்பம் துருக்கியையும், சிரியாவையும் நிலை குலைய வைத்துள்ளது. இதுவரை 1,500-க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் இடிபாடுகள் முன் காத்திருக்கும் மக்கள்
  • அதிகாலை 4.30 மணியளவில் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது துருக்கியின் காசியான்டேப் நகரிலிருந்து 40 கீலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 11 மைல் ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டது.
  • என்னவென்று உணர்வதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமாக நூற்றுக் கணக்கான உயிர்கள் பறிபோயின.

  • காசியான்டேப் சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அதனால் துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் துருக்கியில் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் துருக்கியில் பலியானதாக தகவல்.
  • உலகின் அதிகமான பூகம்ப மண்டலங்களில் துருக்கியும் ஒன்று. 1999-ஆம் ஆண்டு துருக்கியின் டுஸ்ஸே நகரில் 7.4 ரிக்டர் அளவில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. அதில் சுமார் 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். துருக்கி வரலாற்றில் தற்போதுவரை அதுதான் மோசமான பூகம்பமாக அறியப்படுகிறது. அதன் பின்னர் 2020, 2022 ஆம் ஆண்டுகளிலும் சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டன.

  • சிரியாவில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் இந்த பூகம்பத்தால் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1700 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
  • துருக்கியில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீதிகள் எங்கும் கட்டிட இடிபாடுகளும் மரண ஓலங்களுமே நிறைந்திருக்கின்றன.

  • அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கியில் நிறைய கட்டிடங்கள் ப்ர்ட்டில் கான்க்ரீட் எனப்படும் வலுவற்ற கட்டுமான பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளதாலேயே சேதம் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
  • பூகம்பம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது ”நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில் கடந்து செல்வோம் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கட்டிடக் கலைக்கு பெயர்போன துருக்கியில் சிதிலமடைந்து நிற்கும் கட்டிடம்
  • துருக்கி, சிரியா பூகம்பங்களை தொடர்ந்து இந்தியா துருக்கி மீட்புப் படையையும், நிவாரணப் பொருட்களையும் அனுப்பிவைக்கிறது. துருக்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
  • துருக்கியில் இடிந்த கட்டிடங்களில் மருத்துவமனைகளும் அடங்கும். அதனால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அங்கு கடுமையான பனிப்பொலிவு நிலவுவதால் மீட்புப் பணிகளையும் முழுவீச்சில் செய்யமுடியாத சூழல் உள்ளது.
  • துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4 மணியளவில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கல் 7.5 ரிக்டராக பதிவாகியுள்ளது.
  • சிரியாவில் மலைபோல் குவிந்துள்ள கட்டிட இடிபாடுகள்
  • சிரியாவுக்கும், துருக்கிக்கும் மீட்பு, நிவாரணக் குழுவை அனுப்புவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சிரியா வீரர்களை அனுப்பி உதவியது குறிப்பிடத்தக்கது.
  • மீட்புப் பணியில் சிரிய படையினர்
  • உயிருடன் மீட்கப்பட்ட நபர் | சிரியா
  • சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை
  • இந்த பூகம்பத்திற்கு துருக்கி – சிரியா இரு நாடுகளிலும் இதுவரை 1,500 பேர் வரை பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பூகம்பத்திற்கு துருக்கியின் காசியான்டேப், சிரியாவின் அஃப்ரின் நகரமும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.

  • இரு நாடுகளிலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 1939-ஆம் ஆண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு பூகம்பம் இது என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.