ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: யார் யாருக்கு எந்தெந்த சின்னங்கள்? – தொகுப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் யார் யாருக்கு எந்தெந்த சின்னங்கள்?
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸின் இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுகவின் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் கூறியுள்ளார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் குக்கர் சின்னம் கேட்டதால் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி வேட்பாளர் கே. பி.எம்.ராஜாவிற்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளது. விஸ்வபாரத் மக்கள் கட்சி வேட்பாளர் வேலுமணிக்கு டார்ட் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.