மேட்டுப்பாளையம்: முதன்முறையாக இறந்த வாலிபரின் தோல் வேறொருவருக்கு தானம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியை சேர்ந்தவர்  நாகராஜ் (31). இவர் மேட்டுப்பாளையத்தில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று அவரது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டு, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. 

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை உருவாகிய 138 ஆண்டுகளில் இதுவரை தோல்தானம் என்பது நடைபெறவில்லை. இந்த நிலையில் உயிரிழந்த நாகராஜ் உடலில் இருந்து அவரது தோல் மற்றும் கண்களை தானம் செய்ய அவரது தாய் வள்ளி ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து கோவையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டனர். 

அவர்கள் உடல் உறுப்புகளை தகுந்த பாதுகாப்பு வசதியுடன் எடுத்து செல்ல கூடிய பெட்டிகளை கொண்டு வந்தனர். பின்னர், மருத்துவர்கள் நாகராஜின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். நாகராஜின் உடலில் இருந்து எடுத்து செல்லபட்ட தோல் தீ காயம் ஏற்பட்டு தோல் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் விபத்தில் சிக்கி பெரிய அளவில் காயம்  அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ பரிசோதனைக்கு பின் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பாவங்களை போக்கும் மகாசிவராத்திரி பூஜை! செய்ய வேண்டியதும்… செய்யக் கூடாததும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.