இங்கிலாந்து : மதுபாட்டிலால் தந்தையை குத்திக்கொன்ற இந்திய வம்சாவளி

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் லண்டன் அருகே உள்ள சவுத்கேட் என்ற இடத்தில் வசித்து வந்தவர், அர்ஜன் சிங் விக் (வயது 86). இந்திய வம்சாவளி. இவரை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது மகன் டீக்கன் பால் சிங் விக் (54) ஷாம்பெயின் மது பாட்டிலால் குத்திக்கொலை செய்து விட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கே விரைந்த போலீசார் டீக்கன் பால் சிங் விக்கை கைது செய்தனர். அப்போது அவர், அங்கே 100 ஷாம்பெயின் பாட்டில்கள், 10 அமேசான் டெலிவரி பெட்டிகளில் விஸ்கி பாட்டில்களைத் தனது படுக்கையில் போட்டிருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர்.

அவர் மீது அங்குள்ள கோர்ட்டில் விசாரணை நடந்தது. முதல் நாளில் அவர் குற்றத்தை மறுத்தார். ஆனால் மறுநாளில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் தனது தந்தையைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்மானித்து, ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.