துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் இழப்பு 100 பில்லியன் டாலர் என மதிப்பு

துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்பு 100 பில்லியன் டாலர் இருக்கும் என ஐநா சபை கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காணொலிக் காட்சி மூலம் பேசிய ஐநா வளர்ச்சித் திட்ட அதிகாரி லூயிஸா வின்டென், துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தொடர்பாக மதிப்பீடு நடந்து கொண்டிப்பதாகத் தெரிவித்தார்.

வரும் 16ம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் நடக்கும் நிதி திரட்டுவதற்கான நன்கொடையாளர் மாநாட்டின் அடிப்படை விஷயமாக துருக்கி நிலநடுக்கம் எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.