நாம் தமிழர் கட்சி சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான் பேசிய வீடியோவை  தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சீமான் மீது ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.