அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கு; உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என்று

தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து

தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மனோஜ் பாண்டியன் தரப்பு, வைத்திலிங்கம் தரப்பு, ஜே.சி.டி பிரபாகரன் தரப்பு ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் வாதத்தை முன்வைத்தனர்.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவி

அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப் படியே வழக்கை தொடர்ந்துள்ளோம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே தேர்தல் ஆணையம் கடிதங்களை அனுப்புகிறது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் இன்னும் கலைக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றம் இதை தீர்மானிக்கவில்லை. இரு பதவிகளும் தற்போது சட்டப்படி உள்ளன.

நிரந்தர பொதுச் செயலாளர்

இடைக்கால பொதுச் செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது. நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்று அறிவித்து விட்டு இப்போது தேர்தலை அறிவித்துள்ளனர். ஜெயலலிதாவே பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.

பொதுச் செயலாளர் தேர்தல்

கடந்த வெள்ளிக்கிழமை பொதுக்குழு வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் அன்று மாலையே பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் யாரும் போட்டியிட முடியாது என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல்

பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பதில் மனுவிற்கு அவகாசம் கேட்டு பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிவு என்று அறிவித்துள்ளனர். இன்று மாலையே வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதாக கூறி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கலாம்.

ஏன் இந்த அவசரம்?

36 மணி நேரத்தில் 20 மாவட்ட செயலாளர்களை சந்தித்து முன்மொழியவும், வழிமொழியவும் எப்படி கோர முடியும். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதா? ஏன் இந்த அவசரம். ஓரிரு நாட்களில் பதிலளிக்க உத்தரவிட வேண்டும்.

கட்சியும், சின்னமும்

அதுவரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். பொதுச்செயலாளர் தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாதது ஆகி விடும் என்று வாதிட்டனர்.

இந்நிலையில் பதில் மனு தாக்கல் செய்ய நாங்கள் அவகாசம் கோரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதற்கிடையில் அதிமுக கட்சியும், சின்னமும் எங்களிடம் தான் உள்ளது. அதிமுக எங்களுக்கு தான் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.