அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளதாக, கட்சியின் தேர்தல் ஆணையர்கள் அறிவித்துள்ளனர்.
அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், எடப்பாடி பழனிச்சாமி அடித்து களமாடி வருகிறார். அதிமுக தொண்டர்களுக்கும் புதிய உச்சகம் வந்துள்ளது.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற வேட்பு மனு தாக்களில், எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவருக்கு ஆதரவாக 224 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் தேர்தல் ஆணையர்கள் அறிவித்துள்ளனர்.
இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. விரைவில் அவர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
அதே சமயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம். மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்த வழக்கை நேற்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
அதே சமயத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் மீதான உரிமையியல் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு வருகின்ற 24ஆம் தேதி வெளியிடப்படும், அதுவரை பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.