அரசியல் தலைவர்கள், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது புதிய விஷயமல்ல. இதற்கு முன்பும் கூட, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்.
தொகுதி கிடைக்காமல், சித்தராமையா அவதிப்படுகிறார். எந்த தொகுதியில் போட்டியிடுவது என, தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். தோல்வி பயத்தால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட, ஆர்வம் காண்பிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது புதிய விஷயம் அல்ல. குமாரசாமி, சித்தராமையா, ஸ்ரீராமுலு உட்பட, பல தலைவர்கள் இது போன்று போட்டியிட்டுள்ளனர். ஒரு தொகுதியில் வெற்றி பெற்று, மற்றொரு தொகுதியில் தோற்ற உதாரணங்கள் உள்ளன.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, 1989ல் ஹாசனின் ஹொளேநரசிபுரா, ராம்நகரின் கனகபுரா என, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், இரண்டிலும் தோல்வி அடைந்தார்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement