மியாமி ஓபன் டென்னிஸ்: பெகுலா, லினெட் 3-வது சுற்றில் வெற்றி

மியாமி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான டேனியல் காலின்ஸ் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெகுலா 6-1, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் காலின்சை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மற்றொரு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை மேக்டா லினெட், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் மோதினார். இந்த போட்டியில் லினெட் 7-6 (7-3), 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அசரென்காவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

நாளை நடைபெறவுள்ள கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெசிகா பெகுலா, மேக்டா லினெட்டை சந்திக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.