ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு| Adjournment of verdict in RSS rally case without date: Supreme Court

புதுடில்லி: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (மார்ச் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை மார்ச் 17ம் தேதிக வந்தது. அப்போது வழக்கு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டனர்.

latest tamil news

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணி மேல்முறையீடு மனு இன்று( மார்ச் 27) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.