இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1573 ஆக உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , நேற்று முன்தினம் 1,805 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு , கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 10,300 ல் இருந்து 10,981 ஆக உயர்ந்தது.
image
கடந்த 24 மணி நேரத்தில் , 888 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.30 சதவீதம் ஆகவும் , வாராந்திர பாதிப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 0.02 சதவீதமாகும்., என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,20,958 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தகவல்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.