வெளிநாடு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகைகளை திருடி கிணற்றுக்குள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது!

காஞ்சிபுரத்தில், வெளிநாடு சென்றிருந்த நபரின் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் தங்க நகைகளை திருடி, அதனை கிணற்றுக்குள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் சத்தியமூர்த்தி என்பவர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று காலை ஊர் திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 150 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், ஐந்தரை லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் புகாரளித்தார்.

சிசிடிவி கேமராக்கள் உதவியுடன், கொள்ளையர்கள் 3 பேரை பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், நகைகளை திருப்பணமூர் ஏரிக்கரையில் உள்ள கிணற்றில் பதுக்கி வைத்திருப்பதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் மஞ்சள் நிற பையில் இருந்த 62 சவரன் நகைகளை மீட்ட போலீசார், மற்ற நகைகள் எங்கே? என விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.