Nayanthara: 'சாமி கும்பிட வந்திருக்கோம்.. 5 நிமிஷம் ப்ளீஸ்'.. ரசிகர்கள் திரண்டதால் கோபப்பட்ட நயன்தாரா!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
குல தெய்வ கோவிலுக்கு வெளியே திரண்ட ரசிகர்களிட்ம் நடிகை நயன்தாரா கோபப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன்திருச்சியை பூர்விகமாக கொண்டவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவனின் அப்பாவும் அம்மாவும் காவல் துறையில் பணியாற்றியவர்கள் என்பதால் சிறு வயதிலேயே சென்னையில் செட்டிலாகி விட்டனர். இதனால் விக்னேஷ் சிவன் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.
திருமணத்திற்கு முன்புவிக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்தான். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.
​ Nayanthara: குல தெய்வ கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி… காரணம் இதானா?​
விமான நிலையம்அப்போதுதான் விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவில் குறித்து தெரிய வந்தது. இந்நிலையில் இன்று பங்குனி உத்திரம் என்பதால் நடிகை நயன்தாரா தனது கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தங்களின் குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.
​ Poorna: நயன்தாராவ விடுங்க பூர்ணா குழந்தையோட பேர பாருங்க…​
குல தெய்வ கோவில்பின்னர் திருச்சி விமான நிலையத்தில் அவர்களின் ரசிகர்கள் அவர்களை வரவேற்று பூங்கொத்து கொடுத்தனர். இதில் பேண்ட் டீ ஷர்ட், ஃப்ரி ஹேர், கூலர்ஸ் என மாடர்ன் லுக்கில் மாஸாக இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் கோவிலுக்கு வெள்ளை நிற சுடிதார், நீல நிற ஷால் என விக்னேஷ் சிவன் டிரெஸுக்கு மேட்சாக அணிந்திருந்தார் நயன்தாரா.
​ Keerthy Suresh: சில்க் ஸ்மிதா போல் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்… தீயாய் பரவும் போட்டோ!​
கோபப்பட்ட நயன்தாராநயன்தாராவும் விக்னேஷ் சிவனும் குல தெய்வ கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் கோவிலுக்கு முன்பு திரண்டு ஆரவாரம் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் சென்ற விக்னேஷ் சிவன் சில நிமிடங்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டார். இதை கவனித்த நயன்தாரா வெளியே திரண்டிருப்பவர்களிடம் வந்து சாமி கும்பிட வந்திருக்கிறோம் 5 நிமிஷம் ப்ளீஸ் என முகத்தில் கோபம் கொந்தளிக்க கடுமையாக கூறினார்.
​ Ajith: அஜித் ரேஸில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான்… சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!​
தாராசுரம் கோவில்இதனை பார்த்த விக்னேஷ் சிவனும் ரசிகர்களும் நீங்கள் உள்ளே போங்க என நயன்தாராவை சமாதானப்படுத்தினர். குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்த நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கும்பகோணத்தை தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர்களுடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நயன்தாரா கோவிலில் வழிபாடு நடத்திய போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.​ Ponniyin Selvan: விருதுகளை வாரிக் குவித்த பொன்னியின் செல்வன்… ​
Nayanthara

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.