தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது … Read more

வரும் 7 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!

அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், எம்ஜிஆர் மாளிகையில், வருகின்ற 7.4.2023 – வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.மேற்கண்டவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த … Read more

நீலகிரி மாவட்டம் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் குளு குளு காலநிலை நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மாவட்டத்தில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. மழைபெய்ததன் காரணமாக … Read more

ரூ.4,400 கோடியில் சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒப்பந்தம்

சென்னை: சென்னையில் ரூ.4,400 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைப்பதற்கான உரிமையை வாபாக் நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஆலை தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மெடிட்டோ ஓவர்சீஸ் நிறுவனத்துடன் இணைந்து வாபாக் மேற்கொள்ள உள்ளது. இது சென்னையில் அமையும் … Read more

இந்தியாவிலிருந்து பிரிந்தது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் நினைக்கின்றனர்: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

போபால்: இந்தியாவிலிருந்து பிரிந்தது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் நினைக்கின்றனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் நடைபெற்ற புரட்சியாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஹேமுகாலனியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மோகன் பாகவத் பேசியதாவது: அகண்ட பாரதம் என்பது உண்மை. பிளவுபட்டிருக்கும் பாரதம் … Read more

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 15 பழங்கால சிலைகள் திரும்ப ஒப்படைப்பு!

இந்தியாவிலிருந்து, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூரால் கடத்திச் செல்லப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 15 சிலைகளை திரும்ப ஒப்படைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சுபாஷ்கபூருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று கிமு 1ம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு வரையிலான செம்பு சிலைகள், கற்சிலைகள் மற்றும் சுடுமண் சிலைகளை திரும்ப வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

கொடுக்கல், வாங்கல் தகராறில் சமாதானம் பேச வந்த ஆட்டோ டிரைவர் கொலை

திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சக்திவேக்கும், அந்த பகுதியை சேர்ந்த முனியசாமி (35), மாரியப்பன் (40) ஆகியோருக்கும்  பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. கடந்த 29ம் தேதி  சக்திவேல், மணிகண்டனிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அவர், கொங்கு மெயின்ரோடுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில், தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாரியப்பன், முனியசாமி ஆகிய இருவரும் சேர்ந்து, மணிகண்டனை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் … Read more

ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்ந்து கால்நடை மருத்துவமனை கட்டும் நடிகை

பெங்களூரு: பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி (85), தமிழில், ‘பட்டினத்தார்’, ‘வளர்பிறை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல மொழிகளில் 500க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி மலைப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில்தான் தற்போது லீலாவதி வசித்து வருகிறார். இவரது மகன் வினோத் ராஜூ கன்னட சினிமாவில் நடிகராக இருக்கிறார்.சோலதேவனஹல்லியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமீபத்தில்தான் லீலாவதி கட்டினார். இதன் மூலம் ஏழைகள் பயன்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் … Read more

ஜனாதிபதி விருந்தை புறக்கணித்த எம்.பி.,க்கள்| MPs boycotted the Presidents dinner

பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறும் போது, ஜனாதிபதி மாளிகை, எம்.பி.,க்களை விருந்திற்கு அழைப்பதுண்டு. சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தென் மாநில எம்.பி.,க்கள் 125 பேரை காலை சிற்றுண்டிக்கு அழைத்துள்ளார். ஆனால், இந்த விருந்திற்கு தமிழகத்திலிருந்து ஐந்து எம்.பி.,க்கள் மட்டுமே பங்கேற்றனராம். இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. பார்லி., நடவடிக்கைகள் முடக்கப்பட்டு இருப்பதால் தி.மு.க., – எம்.பி.,க்கள் தங்கள் தொகுதிகளில் உள்ளனர். தவிர, ‘நீட்’ எதிர்ப்பு விவகாரத்தில் ஜனாதிபதி தங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்கிற ஆதங்கமும் அவர்களிடம் … Read more

'இந்தியன் 2' தீபாவளிக்கு வெளியிட திட்டம்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது தமிழில் 'இந்தியன் 2' படத்தையும் தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. 'இந்தியன் 2' படக்குழுவினர் அடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் முடிவடைய இருக்கிறதாம். அதன்பின் இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் … Read more