தென்காசி அருகே மண் மனம் மாறாமல் நடக்கும் பங்குனி நோன்பு திருவிழா

தென்காசி: இயந்திரமயமான வாழ்க்கையில் புதிய தொழில் நுட்பங்களின் வருகையால் மனிதனின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நோக்கி தான் ஒவ்வொரு காலகட்டங்களில் நமது பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். பழங்காலத்தில் இருந்து உண்ணும் உணவு, உடுத்தும் உடை, உறங்கும் வீடு, கற்கும் கல்வி, வீட்டு விசேஷங்கள் என அனைத்துமே மாறிவிட்டது. கால மாற்றத்தால் அம்மி, உரல் போன்றவை மிக்சி, கிரைண்டர் என மாறியது. தற்போது அதுவும் இன்றி மாவு பாக்ெகட்டுகளாக விற்பனைக்கு வந்து விட்டது. … Read more

கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே: அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஏப்ரல் 1 இன்று மோடி அனைவரையும் முட்டாளாக்குகிறார் என்று காங்கிரஸ் அறிக்கைவிடும்: வந்தேபாரத் ரயிலை தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

போபால்: போபால் – டெல்லி இடையேயான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்தியபிரதேசத்தின் போபால் – தலைநகர் டெல்லி இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது 11வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் போபாலின் ராணி கமல்பதி ரயில் நிலையத்தில் புறப்பட்டு 708 கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து தலைநகர் டெல்லியின் ஹஸ்ரத் நிசாமுதின் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண … Read more

ஓட்டுபோட வருவோருக்கு முக கவசம் கட்டாயம்————–| Face shield is mandatory for drivers.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரம், குடும்ப நலத்துறை கொரோனா விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. எனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனா விதிமுறையை பின்பற்ற வேண்டும். தொற்று பரவாமல் தடுப்பது அவசியம். தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ பெறுவது கட்டாயம். கொரோனா தொற்று அதிகமாக பரவினால், இதற்கு அந்தந்தஅரசியல் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும். ஓட்டுப்பதிவு நாளன்று, … Read more

விஜய்சேதுபதி நடிக்கும் தமிழ் வெப் சீரிஸ் படப்பிடிப்பு துவங்கியது

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார். ஏற்கனவே இந்தி வெப் சீரியில் நடித்துள்ள விஜய்சேதுபதி தமிழில் நடிக்கும் வெப் சீரிஸ் இது. 7ஜி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த வெப் சீரிசுக்கு ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள உசிலம்பட்டி பகுதியில் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த … Read more

விஜய் சேதுபதி நடிக்கும் முதல் தமிழ் வெப் சீரீஸ்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர், விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார். இயக்குநர் M.மணிகண்டன் ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தன் … Read more

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேச்சு; ராகுல் காந்தி மீது அவதூறு புகார்

ஹரித்துவார், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கி நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடந்த இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, கடந்த ஜனவரி 9-ந்தேதி அரியானாவின் ஹரித்துவார் பகுதியில் ராகுல் காந்தி பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறும்போது, 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் காக்கி அரை கால் சட்டைகளை அணிந்து கொண்டு, இந்து பள்ளிகளை நடத்தி கொண்டு … Read more

பானுகா-தவான் அதிரடி: பஞ்சாப் 191 ரன்கள் குவிப்பு…!

மொகாலி, 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் ஜெயித்த … Read more

கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வடகொரியா

பியாங்யாங், வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அதிபராக உள்ள கிம் ஜாங் உன் பல்வேறு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலயில், வடகொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கையை தென்கொரியா வெளியிட்டுள்ளது. அதில், சிறுவர்களுக்கு மரண தண்டனை, ஆறு மாத கர்ப்பிணிக்கு மரண தண்டனை போன்ற மிக கொடூரமான மனித உரிமை மீறலில் வடகொரியா விதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே போல், உயரம் குறைவான பெண்களுக்கு … Read more

தமிழக மக்களின் பாகுபலியே…  எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்த கோவை அ.தி.மு.க

தமிழக மக்களின் பாகுபலியே…  எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்த கோவை அ.தி.மு.க Source link