சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி பியூன் – போக்ஸோவில் கைது.!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி பியூன் – போக்ஸோவில் கைது.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள தெற்கு ரோகினி காவல் நிலையத்தில் நேற்று பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த  புகாரில், தனது நான்கு வயது மகள் பள்ளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மீசை இருந்தது என்பதற்கான ஒரே ஒரு துப்பு மட்டுமே எங்களிடம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் தீவிர விசாரணை நடத்தினோம். 

அதேபோல் பாதிக்கப்பட்ட குழந்தையிடமும் விசாரணை நடத்தினோம். அவர் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து, சுல்தான் புரியைச் சேர்ந்த சுனில் குமார் கைது செய்யப்பட்டார். இவர் அதே பள்ளியில் பியூனாக பணிபுரிகிறார்” என்று தெரிவித்தார். 

இதற்கிடையே பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. சிறுமியின் தயார் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் பியூன் மீது போக்சோ உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி பியூன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.