விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு..?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 2023 ஜனவரி 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்ட நிலையில் மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.