மாணவர்கள் கவனத்திற்கு..‌12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

தமிழகத்தில் கடந்த 8ம்தேதி 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு எழுதி, தங்களுடைய மேற்படிப்பை தொடர தமிழ் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.

அந்த வகையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 47,934 பேர் ஒரு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். ஒரு சில பேர் மூன்று பாடங்களிலும், இன்னும் சிலர் இரண்டு பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார்கள்.

 

இந்த நிலையில் துணைத் தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 19 ஆம் தேதி நடக்கக்கூடிய இந்த துணை தேர்வின் முடிவுகள், ஜூலை மாதமே வெளியிடப்படுகிறது. 

இந்த நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணை தேர்வை எழுத மே 12ம் தேதி முதல் விண்ணப்பித்த நிலையில், இன்று கடைசி நாளாகும். மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க படித்த பள்ளி அல்லது அரசு மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.