போலி வெடிகுண்டுடன் வங்கிக்குள் புகுந்து ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த வங்கி ஊழியர்கள்..!

தெலுங்கானாவில் போலி வெடிகுண்டுடன் வங்கிக்குள் புகுந்து 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மெட்சல் மாவட்டம் ஜி.டி மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் நேற்று மாலை உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு புகுந்த நபர், 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், மறுத்தால் வெடிகுண்டை வெடிக்கச் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

சாமர்த்தியமாக செயல்பட்ட வங்கி ஊழியர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பெயர் சிவாஜி என்பதும், கிரேன் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்த அவருக்கு பார்வை கோளாறு ஏற்பட்டு வேலையிழந்ததால், பணத் தேவைக்காக, போலி வெடிகுண்டை உடலில் கட்டி வங்கியில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.