சபரீசன் டீம் எடுக்கும் சர்வே: வேட்பாளர்களை தேர்வு செய்யும் ஸ்டாலின் – மாறும் திமுக தேர்தல் வியூகம்!

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தலை குறிவைத்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 மக்களவைத் தேர்தலைப் போன்றே தொகுதிப் பங்கீடு இருக்கும் என்றும் பாரிவேந்தரின் ஐஜேகா வெளியேறி கமல்ஹாசனின் மநீம இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பா?2019 மக்களவைத் தேர்தலில் திமுக 20 இடங்களில் தங்கள் வேட்பாளர்களை இறக்கியது. இந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையில் தான் திமுக வேட்பாளர்கள் என கூறப்பட்டாலும், கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளில் தான் போட்டியிடுவார்களா என்றால் இல்லை என்றே கூறுகின்றனர் திமுக மேலிட வட்டாரத்தில்.
சபரீசனுக்கு கொடுத்துள்ள முக்கிய பணி!கடந்த முறை திமுக சார்பில் நிறுத்தபட்ட அத்தனை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இம்முறை அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்றால் பலருக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறுகிறார்கள். யாரை வேட்பாளராக நிறுத்தலாம், எந்த தொகுதியில் களமிறங்கலாம் என்பது குறித்த முக்கிய பணியை ஸ்டாலின் தனது மகன் சபரீசனிடம் வழங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
சுனில் கனுகோலு2016 முதலே திமுகவின் தேர்தல் பிரச்சாரம், வியூகம் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் துணை கொண்டே வடிவமைக்கப்படுகிறது. 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் சுனில் கனுகோலு தான் திமுகவுக்கு தேர்தல் பணிகளை முன்னின்று செய்தார்.
ஐபேக் பிரசாந்த் கிஷோர்2021 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்தது. இதனால் சுனில் கனுகோலுவை அதிமுக ஒப்பந்தம் செய்தது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியதில் சுனிலின் பங்கும் உள்ளது என்ற பேச்சு அதிமுகவுக்குள் அப்போதே கேட்டது. திமுகவின் வியூகங்கள், பிளஸ், மைனஸ்கள் தெரியும் என்பதால் சுனில் அதிமுகவுக்கு பல தொகுதிகளில் வெற்றியை தேடிக் கொடுத்தார் என்று கூறப்பட்டது.
தொகுதி வாரியாக எடுக்கும் சர்வே முடிவுகள்இந்த தேர்தல் பிரச்சார வியூகம் அமைக்கும் நிறுவனங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது, மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், எந்த தொகுதியில் போட்டியிடலாம், எந்த தொகுதியை கூட்டணிக்கு விட்டுகொடுக்கலாம், யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து பல்வேறு சர்வேக்களை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டே கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் கொடுக்கின்றனர்.
சபரீசன் நிறுவனம்இது திமுகவுக்கு தொடர்ந்து சாதகமாகவே அமைந்துள்ளது. அதே சமயம் கட்சி குறித்த ஒட்டுமொத்த ஜாதகமும் ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கைக்கு செல்வதை திமுக விரும்பவில்லை. இதனால் தான் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தேர்தல் வியூகம் அமைக்கும் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
களத்தில் இறங்கும் சபரீசன் டீம்!அந்த நிறுவனம் தற்போது சமூகவலைதளங்களில் திமுக குறித்தும், ஸ்டாலின் குறித்தும், உதயநிதி குறித்தும் வரும் செய்திகளை அலசி ஆராய்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு பெரிய வெற்றியை கொடுக்கக் கூடிய தொகுதிகள், அங்கு யாரை நிறுத்தலாம் என்பது குறித்து சத்தமில்லாமல் சர்வே எடுக்க தொடங்கிவிட்டதாம். இதன் முடிவையே ஸ்டாலின் அங்கீகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள்.

ஸ்டாலின் எடுக்கும் இறுதி முடிவு!​​
ஐபேக் வருகையின் போது திமுக சீனியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சிக்காரனை நம்பி தேர்தலில் நின்றால் தான் நன்றாக இருக்கும், ஏதோ ஒரு கம்பெனிக்காரன் சொல்வதைக் கேட்டு எப்படி செயல்பட முடியும் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால் ஸ்டாலின் ஐபேக் முடிவில் உறுதியாக இருந்தார். தற்போது அந்த பணியை முதல்வரின் மருமகனே செய்கிறார் என்பதால் திமுக சீனியர்கள் உஷாராகியுள்ளனர். சபரீசன் டீம் வழங்கும் வேட்பாளர்கள் பட்டியல், மாவட்டச் செயலாளர்களிடம் பெறப்படும் பட்டியல் ஆகியவற்றை பெற்று ஸ்டாலின் இறுதி முடிவை எடுப்பார் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.