திமுகவுக்கு தேர்தல் வேலைபார்க்கும் ஆர்.என்.ரவி, அமலாக்கத்துறை: ஸ்டாலின் கிண்டல்!

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஜூன் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்றும் நாளையும் (ஜூலை 17, 18) பெங்களூரில் இரண்டாவது கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக

தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான

இரண்டு நாள்கள் பயணமாக சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பாட்னாவில் கூட்டம் நடத்தி சில முடிவுகளை எடுத்தோம். இன்றும் நாளையும் பெங்களூரில் கூட்டம் நடத்துகிறோம். 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பிஜேபியை ஒழிப்பதற்காக கூட்டம் கூட்டுவதால் அக்கட்சி எரிச்சல் அடைந்திருக்கிறது. அதனுடைய வெளிப்பாடாகத் தான் இன்றைக்கு அமலாக்கத்துறையை ஏவி விட்டு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனையை நடத்தி வருகிறார்கள்

ஏற்கெனவே இதே வேலையை வடமாநிலத்தில் செய்து வந்தார்கள், இப்போது தமிழ்நாடு பக்கம் வந்துள்ளனர்.

பொன்முடி வீட்டில் சோதனை நடத்துவதற்கு அடிப்படையாக உள்ள வழக்கு அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது புனையப்பட்ட பொய் வழக்கு. 13 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட வழக்கு இது. பத்தாண்டு காலம் அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை திசை திருப்புவதற்காக இப்படி சோதனைகள் நடைபெறுகின்றன. மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தகுந்த பதிலை தருவார்கள்.

ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆளுநர் திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இப்போது அமலாக்கத்துறையும் இணைந்துள்ளது. ஆகவே எங்களுக்கு தேர்தல் வேலை சுலபமாகத் தான் இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

காவேரி பிரச்சினை குறித்து எதிர்கட்சிகள் கூட்டத்தில் பேசுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “காவேரி உரிமைப் போராட்டத்தில் தலைவர் கலைஞர் வழியிலிருந்து கிஞ்சிற்றும் விலகாமல் நமது பணிகள் தொடரும். எதிர்கட்சி கூட்டம் என்பது நாட்டுக்கே சூழ்ந்துள்ள ஆபத்தை களைவதற்கு கூட்டப்படும் கூட்டம் ஆகும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.