மிரட்டும் மழை.. ஆரஞ்சு அலர்ட் வேறு.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பெங்களூர்:
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவ
மழை
யின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பிரித்து மேய்ந்து வருகிறது. குறிப்பாக, 10 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதலாக கனமழை பெய்து வருவதால் குடகு, உத்திர கன்னடா, சிக்கமங்களூரு, தக்சின கன்னடா, பெலகாவி, ஹாசன் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஓஎம்ஆர்-க்கு இன்னைக்கு நைட்டு போறீங்களா.. வெதர்மேன் பரபர “வார்னிங்”

இந்நிலையில், நாளையும் அந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், குடகு மாவட்டத்தில் மிக மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதுடன் அந்த மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாளை குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.