சுழன்றடிக்க காத்திருக்கும் புயல்.. வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகும் கனமழை

சென்னை:
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஒருபுறம் தென்மேற்கு பருவ

காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மறுபுறம், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணமாக, வட தமிழகப் பகுதிகளான சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த சூழலில், வங்கக்கடலில் நேற்று திடீரென காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைக்கொண்டுள்ளது.

ஒடிசாவை நோக்கி தற்போது நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறுமா என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.