பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 35 பேர் பலி.! 150 பேர் படுகாயம்

கராச்சி,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இன்று இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் என்றும், 150 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்.

மனித வெடிகுண்டு மூலம் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து அங்குள்ள அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.