சந்திரயான் 3 சக்ஸஸ்… சாதனை படைத்த இந்தியா… கொண்டாடி தீர்க்கும் இந்தியர்கள்!

சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு அதன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதனை இந்தியர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி வருகின்றனர்.

தென் ஆப்பிரக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி , காணொலி வாயிலாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை கண்டு மகிழ்ந்தார். விக்ரம் லேண்டர் திரையிறங்கியதும் தேசிய கொடியை காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் 3 திட்டத்திற்காக செலவழித்து வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டரின் சாஃப்ட் லேண்டிங்கை கைகளை தட்டி ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியா நிலவில் தடம் பதித்த இந்த தருணத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கைகளில் தேசியக் கொடியை ஏந்தியப்படி வெற்றி வெற்றி என மக்கள் முழுக்கமிட்டு வருகின்றனர். பலரும் வீதிகளில் நடனமாடி சந்திரயான் 3 வெற்றியை கொண்டாடி வருகின்றனர், சந்திரயான் 3 வெற்றியால் இந்திய மக்கள் கொண்டாட்ட மோடில் உள்ளனர். சமூக வலைதளங்களில் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும், நெட்டிசன்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.